சிலதினங்களுக்கு முன்பு கே டிவியில் நமது விஜய.டி.ஆரின் வீராசாமி படம் பார்த்தேன்.சிரிச்சு சிரிச்சு வயிறே வலிச்சிருச்சு. அந்த அளவுக்கு அவர் செய்யும் ஒவ்வொரு செயலும் ரொம்ப காமெடியாக இருந்தது. அதனால இந்த முறை அவர வச்சு கலாய்க்கலாம்னு முடிவு பண்ணினேன். நம்ம டி.ஆரை சிஎன்என் ஐபிஎன்னில் வரும் ராஜ்டீபை வைத்து பேட்டி எடுக்கவிட்டா எப்படி இருக்கும்னு ஒரு கற்பனை.
ராஜ்தீப் : இன்று உலக சுற்றுச்சூழல் தினம். இந்த தினத்தில் நாம் ஒரு விஐபியை பேட்டி காணப் போகிறோம். சுற்றுச்சூழல் தினத்திற்கும் இந்த விஐபிக்கும் என்ன சம்பந்தம் என நீங்கள் கேட்கலாம். அதை நான் நிகழ்ச்சியின் முடிவில் சொல்கிறேன்.நம்முடைய நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் வி.ஐ.பி பற்றி ஒரு சிறு முன்னோட்டம்.இவரை பார்க்கும் போது குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் என்ற டார்வினின் கோட்பாடு தவறானோதோ, ஏன் கரடியிலிருந்து தோன்றியிருக்கக் கூடாது? என சில நேரங்களில் எண்ணத் தோன்றும். சமிபத்தில் வெளிவந்து நமது எல்லோரையும் மகிழ்வித்த காமெடி படமான வீராசாமியின் கதாநாயகன்.இவரே ஒரு கொடுமையான ஆசாமி இவரது மகன் இவரைவிட மிகக் கொடுமையான ஆசாமி. நான் இன்று பேட்டி காணப் போகும் விஜய.டி.ராஜேந்தரைப் பற்றி உங்களுக்கு மேலும் அறிமுகம் தேவை இல்லை என நினைக்கிறேன் .
(ராஜ்தீப் சொல்லிக்கொண்டிருக்கும்போது புயல் போல உள்ளே நுழைகிறார் டி.ஆர்)
டி.ஆர் : Sorry for the Interruption
This is only my introduction
During the cross examination
You will see my action and Direction.
Added with Perfection.
ராஜ்தீப் : சார் இப்ப என்ன ஆச்சுன்னு இப்படி இங்கிலீச கடிச்சு துப்புறீங்க.
டி.ஆர் : Dont get Emotion and irritation
you wait and see my further action.
ராஜ்தீப் : ஸ் அப்பா ... ஓப்பனிங்லயே கண்ணைக்கட்டுதே. சார் முதல்ல வீராச்சாமி படத்தப் பற்றி ரசிகர்களுக்கு ஏதாவது சொல்லுங்க.
டி.ஆர் : தமிழ் சினிமாவுல இந்த மாதிரி ஒரு காவியக் காதல் இதுவரை வந்தது கிடையாது. ஒரு லைலா - மஜ்னு, அம்பிகாபதி - அமராவதி, ரோமியோ - ஜுலீயட் மாதிரி இனிமே டிஆர்- மும்தாஜ் ஜோடியும் வரலாற்றில் இடம் பெரும். அப்படின்னா இது காதல் படமா சார்னு நீங்க கேட்டா இது காதல் படம் மட்டும் அல்ல. இந்தப் படத்தில் சண்டைக்காட்சிகள் எல்லாம் டூப் இல்லாம போட்டிருக்கிறேன்.
ராஜ்தீப் : (இடைமறித்து) சார் சார் ரீல் அந்துடப்போகுது. படம் ரிலீஸ் ஆகுறதுக்கு முன்னாடி மனப்பாடம் பண்ணுனதையை இன்னும் ஒப்பிக்கிரீங்களே சார். அதான் படம் வந்து ஒரு ஷோ கூட உருப்படியா ஓடாமா மறுபடியும் பெட்டிக்குள் போயிடுச்சே.
டி.ஆர் : யாரு சொன்னா அப்படி ?
ராஜ்தீப் : அதான் இண்டர்நெட்டுல எல்லாம் நாரடிக்கிறாங்களே.
டி.ஆர் : (டென்சனாகி) என் படம் நல்லா ஓடலேன்னு சொல்ல நீ யாரு மேன். இன்னைக்கு வரைக்கும் சன் டிவில இருபது தடவை போட்டிருக்காங்க. நல்லா இல்லாத படத்தையா இத்தனை தடவை போடுவாங்க.படத்த பார்த்த என் ரசிகனுங்க எல்லாம் அண்ணே உங்களுக்கு இந்த படத்துக்கு கண்டிப்பாக ஆஸ்கார் அவார்டு கிடைக்கும்னு சொல்றாங்க. வார்த்தையை அளந்து பேசு.
ராஜ்தீப் : இல்ல சார் இந்த படத்தை பார்த்த சில பேர் 'KINGKONG' படத்தை தமிழில் பார்ப்பது போல இருந்தது என்கிறார்களே?
டி.ஆர் : You are Oppressing,Depressing and Suppressing the feelings of Tamilans.நீ கூட தான் எங்க ஊரு வசந்த் அண்ட் கோ ஓனர் கோர்ட்ஐ போட்டுக்கிட்டு ஊட்டில பிச்சை எடுக்கிறவன் மாதிரி இருக்கிறன்னு மக்கள் சொல்கிறாங்க. செய்திகளை சுவாரசியமா சொல்லுற பேர்வழின்னு குட்டி போட்ட குரங்கு குட்டி மாதிரி குதிச்சு குதிச்சு பேசுற. அதயெல்லாம் நாங்க கேட்குறோமா?.
ராஜ்தீப் : ஏன் சார் இப்படி அறிவுகெட்டத்தனமா பேசுறிங்க?
டி.ஆர் : (கடுப்பாகி) யாரப்பாத்து அறிவு இல்லாதவன்னு சொல்லுற. அப்ப ஏன் அறிவு இல்லாதவன பேட்டி எடுக்க வந்த. அறிவு இல்லாதவன்ன பேட்டி எடுக்க வந்த நீ அறிவு இல்லாதவனா ? இல்ல நான் அறிவு இல்லாதவனா? கையுல மைக்கு இருக்குதுங்கிறதுக்காக என்ன வேணாலும் கேட்கக்கூடாது? c'mon tell me man?
ராஜ்தீப் : சாரி சார் மன்னிச்சுக்கோங்க
டி.ஆர் : Dont Say Sorry
I am not a Lorry
To carry your Sorry
ராஜ்தீப் : சரி சார் அதவிடுங்க. எங்களுக்குக்காக உங்களோட அடுக்கு மொழி வசனம் ஒன்ன எடுத்து விடுங்க சார்.
டி.ஆர் : என் தங்கை கலியாணி
ஊசிப் போன சாப்பிட முடியாது பிரியாணி.
ராஜ்தீப் : ஆகா அருமை. இன்னொன்னு சொல்லுங்க சார்.
டி.ஆர் : என் தங்கை கலியாணி
ஊசிப் போன சாப்பிட முடியாது பிரியாணி.
ராஜ்தீப் : என்ன சார் வேற சொல்ல சொன்னா திரும்ப அதையே சொல்லுறீங்க.
டி.ஆர் : ஏய் முதல்ல சொன்னது சிக்கன் பிரியாணி. இப்ப சொன்னது மட்டன் பிரியாணி.ஏய் டண்டனக்கா ஏய் டனக்குடக்கா.
ராஜ்தீப் : பின்னுறீங்க போங்க சார். அப்புறம் உங்க மகன் சிம்புவைப் பத்தி சொல்லுங்க சார்.
டி.ஆர் : கடையில விக்குது பன்னு
சிம்பு என்னோட மூத்த சன்னு தேவையில்லாம அவன எதிர்த்து நின்னு நீ தலையில போட்டுக்காத மண்ணு.
ராஜ்தீப் : (தலையில அடித்துக் கொண்டு ) சத்தியமா இந்த மாதிரியெல்லாம் கவிதை சொல்ல உங்களை விட்டா வேற ஆளு கிடையாது.
டி.ஆர் : (தொடர்கிறார்) மீன் குட்டிக்கு நீந்த யாரும் கத்துக் கொடுப்பதில்லை. மான்க்குட்டிக்கு ஓட யாரும் கத்துக் கொடுப்பதில்லை. அதுபோலத் தான் சிம்புவுக்கும். அவனுக்கு நாதாரித்தனமாக பேசுவதற்கு யாரும் கொடுக்கத் தேவையில்லை. நாதரித்தனமா பேசுவது, பிக்காளித்தனம் பண்ணுவது எல்லாம் எங்கள் ரத்தத்தில் கலந்துள்ளது.
ராஜ்தீப் : இப்படி திறந்த புத்தகமா இருக்குறீங்களே சார். அப்புறம் அடுத்து என்ன படமெல்லாம் பண்ணிக்கிட்டு இருக்கீங்க.
டி.ஆர் : காக்க காக்க ஸ்டைல்ல ஒரு போலிஸ் ஸ்டோரி பண்ணிக்கிட்டு இருக்கேன். இதுக்காக எக்ஸ்சர்சைஸ் எல்லாம் பண்ணி உடம்ப ட்ரிம் பண்ணியிருக்கேன்.அப்புறம் இந்த படத்துக்காக நான் சிக்ஸ் பேக் எல்லாம் வைக்கப்போறேன்.
ராஜ்தீப் : (மனதிற்குள்) ரைஸ் பேக் (Rice Bag) மாதிரி உடம்ப வச்சிக்கிட்டு இவரெல்லாம் சிக்ஸ் பேக் பத்தி பேசுகிறார்.கேடி பக்கிரி மாதிரி இருந்துகிட்டு இதெல்லாம் போலீசா நடிச்சி எத்தனை பேரு குடியைகெடுக்கப்போகுதோ.
ராஜ்தீப் : அப்புறம் சினிமாவுல உங்களுக்கு போட்டியா யார நீங்க நினைக்குரிங்க.
டி.ஆர் : ரஜினி, கமல் எல்லாம் ரொம்ப ஓல்டாயிட்டாங்க. அஜித்,விஜய்க்கெல்லாம் என் அளவுக்கு டேலன்ட் கிடையாது. தனுஷ் அவன் ஒரு சுண்டைக்காய். சிம்பு எனது வாரிசு அதனால அவன போட்டியா கருத முடியாது.என்னோட அளவுக்கு அழகு,அறிவு,திறமை,இளமை இல்லாங்காட்டியும் சூர்யாவைத் தான் எனக்கு போட்டியா நான் நினைக்கிறேன்.அதனால சூரியா ஸ்டைல்லயே படம் எடுக்கப்போறேன். "வாரணம் ஆயிரம்" மாதிரி "வானரம் ஆயிரம்" , "காக்க காக்க" மாதிரி "கொக்கு கொக்கு" ன்னு வரிசையா படமா எடுத்து தள்ளப் போறேன்.
ராஜ்தீப் : இத மட்டும் சூரியா அப்பவே கேட்டிருந்தார்ந்னா அயன் படம் எடுக்கும்போது உங்களையும் ஆப்பிரிக்கா கூட்டிட்டு போயி அங்க உங்க கூட்டத்தோட சேர்த்து விட்டிருப்பார்
டி.ஆர் : (ஆவேசமாக எழுந்து )கும்தலக்கடி கும்மா இத வாங்கிகோடா சும்மா
என்று ராஜ்தீப் மூக்கில் ஒரு குத்து விட்டுவிட்டு அரங்கத்தைவிட்டு எழுந்து செல்கிறார்.
ராஜ்தீப் : (மூக்கைத் தடவியபடி) நான் ஏற்கனவே சொன்னதுபோல் இன்று உலக சுற்றுச்சூழல் தினம். இந்த தினத்தில் நாம் இயற்கையை பாதுகாக்க, காடுகள் அழிவதை தடுக்க உறுதிமொழி எடுத்துக்கொள்ளவேண்டும். இல்லாவிட்டால் இப்பப் பார்த்தமாதிரி தான் காட்டுக்குள் இருக்கவேண்டியதுகள் எல்லாம் நாட்டுக்குள் புகுந்து நமக்கு தொந்தரவு கொடுக்கும். காடுகள் அளிக்கப்படாமல் இருந்திருந்தால் இதுகள் எல்லாம் தத்தமது குருப்போடு ஜாலியாக இருந்திருக்கும். நாமும் இவர்களின் தொல்லைகளில் இருந்து தப்பித்திருக்கலாம். ஆகவே நேயர்களே காடுகள் அழியாமல் பாதுகாத்து இதுபோன்ற இம்சைகளில் இருந்து தப்பித்துகொள்ளுங்கள்.இந்த நிகழ்ச்சியை இத்துடன் நாம் முடித்துக்கொள்வோம். இல்லாவிடில் அந்த ஆள் திரும்பி வந்து அவரது மகன் பாணியில் "எனக்கு கேமராவுக்கு முன்னாடி தான் சார் நடிக்கத் தெரியும். கேமராவுக்கு பின்னாடி நடிக்கத் தெரியாது" ன்னு அழுது ஒப்பாரி வைத்தாலும் வைப்பார். ஆகவே நன்றி வணக்கம்.
(பி.கு) நீங்கள் உங்கள் கவலைகளை எல்லாம் மறந்து வயிறு வலிக்க சிரிக்க வேண்டுமா?. youtube.com வலைத்தளத்திற்கு சென்று (CTS நெட்வொர்க்கில் இருந்து முயற்சிக்க வேண்டாம்) 'TR the Terrror' என்ற சொல்லை வைத்து தேடுங்கள்.அதில் 'India Glitz' க்கு டி.ஆர் கொடுத்த பேட்டி மற்றும் டி.ஆரின் பிரஸ்மீட் பேட்டி ஆகியவற்றை கண்டிப்பாக பாருங்கள். சத்தியமா சொல்றேன் அந்த மாதிரி நீங்க வாழ்க்கையில சிரிச்சிருக்கவே மாட்டிங்க.ஓவரா சிரித்து உங்களுக்கு ஏதாவது ஆச்சுன்னா அதற்க்கு நான் பொறுப்பல்ல.






