Monday, May 4, 2009

சாதிப்பாரா சரத்பாபு ?



நமது நாட்டில் அரசியல்வாதியாக என்ன தகுதிகள் வேண்டும். வெள்ளை வெளேர்ன்னு கட்சி கரை வேட்டி கட்டியிருக்க வேண்டும். மழைக்கு கூட பள்ளிக்கூடம் பக்கம் சென்றிருக்க கூடாது. யாராவது படிப்பைப் பற்றிக் கேட்டால் காமராஜர் படித்தவரா? எம்.ஜி.ஆர் எந்த யுனிவர்சிட்டில படித்தார்? என பதில்க் கேள்வி கேட்டு உதார் விட தெரிந்திருக்க வேண்டும். போக்குவரத்துக்கு இடைஞ்சல் செய்து பொதுக்கூட்டம் போட்டு மாற்று கட்சியினரை எவ்வளவு அசிங்கமாக திட்ட முடியுமோ அவ்வளவு அசிங்கமாக திட்ட வேண்டும். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பல் துலக்கும் பிரஷிலிருந்து வீட்டை சுத்தம் செய்யும் விளக்கமார் வரை அனைத்தும் இலவசமாக தருவோம் என வாய்க்கு வந்த வாக்குறுதிகளை அள்ளி வீச வேண்டும். இந்த மாதிரியெல்லாம் ஏதாவது புதுமை செய்தால்தான் மக்களே இவர்களை அரசியல்வாதிகள் என நம்புகிறார்கள்.

ஆனால் இந்த மாதிரியெல்லாம் உதார்விடாத அரசியல்வாதி ஒருவர் இந்தமுறை தென்சென்னை மக்களவை தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் சரத் பாபு. IIT BITS, Pilani யில் பொறியியல் படிப்பை முடித்து விட்டு MBA படிப்பை IIM Ahmedabad யில் முடித்துள்ளார். Software Engineer ஆக மூன்று ஆண்டுகள் பணியாற்றிய இவர் தற்போது சொந்தமாக தொழில் செய்து கொண்டு நிறைய பேருக்கு வேலை வாய்ப்பு அளித்துக் கொண்டிருக்கிறார். பொருளாதார ரீதியில் மிகவும் பின் தங்கிய குடும்பப் பின்னணியில் வந்த இவர் தெளிவான கொள்கைகளை முன் இந்த தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடுகிறார்.

இவரைப் பற்றிய மேலும் விவரங்களுக்கு http://sarathbabu.co.in/in என்ற இவரது இணையத் தளத்தைப் பார்க்கவும்.

No comments:

Post a Comment