
விஷாலின் சூப்பர் மொக்க படமான சத்யம் படத்திற்கு பின்பு வந்திருக்கும் படம். படத்தின் கதை இதுதான். விஷாலின் அண்ணன் சிறுவயதில் அம்மா திட்டியதற்காக ஊரைவிட்டு ஓடிவிடுகிறார். விஷால் வளர்ந்து பெரியவனானதும் இந்த இத்துப்போன பிளாஷ்பேக்கை சொல்கிறார் அழுகாச்சி அம்மா கீதா. அண்ணனை தேடி கண்டுபிடிப்பதற்காக சென்னை வருகிறார். ( சின்ன வயசுல ஓடிபோரவங்க எல்லாம் சென்னைக்கு தான் வரவேண்டும் என்பதுதானே நமது தமிழ் சினிமாவின் நியதி).
அங்கு அண்ணனை தேடும் நேரம் போக மீதி நேரங்களில் ஷ்ரியாவை காதல் செய்கிறார். தமிழ் சினிமா ஹீரோயின்கள் எல்லாம் எப்படிதான் இப்படி சொல்லி வச்சமாதிரி லூசுத்தனமா இருப்பாங்களோ? . அப்புறம் ஒருவழியா விஷால் அவரது அண்ணனை கண்டுபிடித்து விடுகிறார். அவர்தான் கிஷோர். சென்னையை கலக்கும் மிகப்பெரிய ரவுடி. அவரது எதிர் கோஷ்டி பிரகாஷ் ராஜ். இவர்கள் இருவரும் தங்களை மிகப்பெரிய ரவுடியாக வாலண்டரியாக காட்டிக்கொள்கிறார்கள்.
அப்புறம் பஞ்ச் டயலாக்குகள் , கருத்துகள் என பலவகைகளில் படம் பார்ப்பவர்களை சித்திரவதை செய்து பிரகாஷ்ராஜிடமிருந்தும், போலீஸ் எந்கௌன்டரிலிருந்தும் விஷால் அவரது அண்ணனை காப்பாற்றி ஊருக்கு திரும்ப கூட்டிச் செல்வதுதான் மீதி கதை.அப்புறம் தோரணைன்னு ஏன் பேர் வச்சிங்கன்னு யாரும் கேட்டுற குடாது என்பதற்காக இடைவேளைக்குப் பிறகு ஆளாளுக்கு ஒரு முறையாவது தோரணை என்ற வார்த்தையை உபயோகப்படுத்தி நம்மை இம்சிக்கிறார்கள்.
படத்தின் ஒரே பிளஸ் பாயின்ட் சந்தானம் காமெடி. மைனஸ் பாயின்ட் மீதி எல்லாம். அழுகாச்சி அம்மா, லூசுத்தனமான ஹீரோயின், அரைவேக்காடு வில்லன் குருப், டுபாக்கூர் பிளாஷ்பேக், கன்னாபின்னான்னு பன்ச் டயலாக் (நீ அடிச்சா பணம், நான் அடிச்சா நீ பொணம்) என கிட்டத்தட்ட ஒரு விஜய் படம் பார்த்த எபெஃக்ட் இருந்தது. போகிறப் போக்கைப்பார்த்தால் விஜய்க்கு போட்டியா விஷால் வந்துவிடுவார் போல (நம்மை கிச்சுகிச்சு மூட்டுவதற்கு).
அங்கு அண்ணனை தேடும் நேரம் போக மீதி நேரங்களில் ஷ்ரியாவை காதல் செய்கிறார். தமிழ் சினிமா ஹீரோயின்கள் எல்லாம் எப்படிதான் இப்படி சொல்லி வச்சமாதிரி லூசுத்தனமா இருப்பாங்களோ? . அப்புறம் ஒருவழியா விஷால் அவரது அண்ணனை கண்டுபிடித்து விடுகிறார். அவர்தான் கிஷோர். சென்னையை கலக்கும் மிகப்பெரிய ரவுடி. அவரது எதிர் கோஷ்டி பிரகாஷ் ராஜ். இவர்கள் இருவரும் தங்களை மிகப்பெரிய ரவுடியாக வாலண்டரியாக காட்டிக்கொள்கிறார்கள்.
அப்புறம் பஞ்ச் டயலாக்குகள் , கருத்துகள் என பலவகைகளில் படம் பார்ப்பவர்களை சித்திரவதை செய்து பிரகாஷ்ராஜிடமிருந்தும், போலீஸ் எந்கௌன்டரிலிருந்தும் விஷால் அவரது அண்ணனை காப்பாற்றி ஊருக்கு திரும்ப கூட்டிச் செல்வதுதான் மீதி கதை.அப்புறம் தோரணைன்னு ஏன் பேர் வச்சிங்கன்னு யாரும் கேட்டுற குடாது என்பதற்காக இடைவேளைக்குப் பிறகு ஆளாளுக்கு ஒரு முறையாவது தோரணை என்ற வார்த்தையை உபயோகப்படுத்தி நம்மை இம்சிக்கிறார்கள்.
படத்தின் ஒரே பிளஸ் பாயின்ட் சந்தானம் காமெடி. மைனஸ் பாயின்ட் மீதி எல்லாம். அழுகாச்சி அம்மா, லூசுத்தனமான ஹீரோயின், அரைவேக்காடு வில்லன் குருப், டுபாக்கூர் பிளாஷ்பேக், கன்னாபின்னான்னு பன்ச் டயலாக் (நீ அடிச்சா பணம், நான் அடிச்சா நீ பொணம்) என கிட்டத்தட்ட ஒரு விஜய் படம் பார்த்த எபெஃக்ட் இருந்தது. போகிறப் போக்கைப்பார்த்தால் விஜய்க்கு போட்டியா விஷால் வந்துவிடுவார் போல (நம்மை கிச்சுகிச்சு மூட்டுவதற்கு).

No comments:
Post a Comment