கடந்த வாரம் எங்கள் ஊர் திருவிழாவிற்கு செல்வதற்கு முத்துநகர் expressல் டிக்கெட் புக் செய்து இருந்தேன். ஒவ்வொரு வருடமும் திருவிழாவிற்குச் செல்வதற்கு சென்னையில் வசிக்கும் எங்கள் நண்பர்கள் மொத்தமாக நெல்லை expressல் புக் செய்து செல்வோம். ஏனெனில் திருவிழாவிற்கு செல்வதற்காக எங்கு இருந்தாலும் ( வெளிநாட்டில் இருந்தால் கூட ) சென்னை வந்து நெல்லை expressல் தான் எங்கள் நண்பர்கள் நிறைய பேர் வருவார்கள். சென்றவருடம் நானும் எனது நண்பர்களும் நெல்லை Expressல் விருதுநகர் சென்ற அனுபவத்தை இன்றும் மறக்கமுடியாது. ஒவ்வொரு கம்பர்ட்மென்ட்டாகச் சென்று நமக்கு தெரிந்த நபர்கள் யாராவது இருக்கிறார்களா என்று பார்த்து, யாராவது இருந்தால் அவர்களை தூங்க விடாமல் விடிய விடிய அரட்டையடித்தோம்.
ஆனால் இந்தமுறை நண்பர்கள் யாரும் வரவில்லை. மேலும் நெல்லை எக்ஸ்பிரஸ்சிலும் டிக்கெட் கிடைக்கவில்லை. ஆகையால் முத்துநகர் எக்ஸ்பிரஸ்சில் தான் புக் செய்து இருந்தேன்.
வழக்கமாக ட்ட்ரைன்னில் எப்பொழுது தனியாக சென்றாலும், எனது கம்பர்ட்மென்ட்டில் வயதான கிழவிகள் அல்லது முழுக்க முழுக்க ஆண்களே நிரம்பி இருப்பார்கள். அது என் ராசியோ என்னவோ தெரியவில்லை. ஆனால் இந்த தடவை ட்ட்ரைன்க்கு வெளியே ஒட்டி இருக்கும் சார்ட்டை பார்த்த எனக்கு ஒரு இன்ப அதிர்ச்சி. ஆம் எனக்கு அடுத்த சீட் தீபா வயது 24. ஆஹா இந்த தடவைதான் ஒரு பெண்னோடு கடலை போட்டுக் கொண்டு பயணம் செய்யும் வாய்ப்பு கிட்டியுள்ளது என மனதிற்குள் நினைத்தபடியே உள்ளே ஏறினேன்.
ட்ட்ரைன்னில் ஏறிய சிறிது நேரத்தில் அந்த பெண்ணும் வந்தாள். ம்ம் பார்ப்பதற்கு அந்தப் பெண் நன்றாகவே இருந்தாள். வண்டியும் சென்னையை விட்டு கிளம்பியது. எனக்கு எப்பொழுதுமே கொஞ்சம் starting trouble. எவ்வாறு பேச்சை ஆரம்பிப்பது என சிறிய தயக்கம். இருந்தாலும் மனதிற்குள் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அவளிடம் நீங்களும் விருதுநகர்தானா ? எனக்கேட்டேன்.( சார்ட்டில் ஏற்கனவே பார்த்தாச்சுல!). அவளும் ஆம் என்றாள். உடனே நானும் விருதுநகர்தான் எனக்கூறி, நான் வேலை பார்க்கும் கம்பெனி அவள் வேலை பார்க்கும் கம்பெனி முதலியவற்றை பரஸ்பரம் தெரிந்து கொண்டோம். மேற்கொண்டு அவளிடம் பேசும்போது விருதுநகரில் அவளது வீடு எங்க வீட்டிற்கு நாலு தெருதான் தள்ளி உள்ளது என்பதையும் தெரிந்து கொண்டேன். இவ்வாறாக எங்கள் பேச்சு நன்றாகத் தான் போய்க்கொண்டிருந்தது.
அப்பொழுது பக்கத்து compartmentலிருந்து ஒரு சிறுமி (2 வயது இருக்கும்), எங்கள் compartment வந்தாள்.வழக்கமாக இது போல் வரும் குழந்தைகளை நான் கண்டுகொள்ளவே மாட்டேன். ஆனால் இப்போது ஒரு பெண் பக்கத்தில் இருப்பதால் ஒரு ஹீரோயிசத்துக்காக அந்த சிறுமியை தூக்கிக்கொஞ்சினேன். கொஞ்சநேரத்தில் அந்த சிறுமி அழ ஆரம்பித்துவிட்டாள். சரி இறக்கி விடலாம் என நினைத்தபோது அந்த சிறுமி என்ன நினைத்ததோ வாயில் வைத்திருந்த பிஸ்கட்டை என் மீது துப்பிவிட்டது. இதைப்பார்த்து அந்த பெண் சிரித்தே விட்டாள். எனக்கெல்லாம் சரியான கோபம். இருந்தாலும் ஒரு வழியாக சமாளித்துக்கொண்டு இந்த குழந்தைகளே இப்படித்தான், இந்த மாதிரி குறும்புபன்ற பசங்களை எனக்கு ரொம்பப்பிடிக்கும் என அசடு வழிய அவளிடம் கூறினேன்.சட்டையை கழுவிவிட்டு வந்தால் செங்கல்பட்டு ஸ்டேஷன் வந்துவிட்டது.
அந்த ஸ்டேஷனிலிருந்து ஒரு பெரியவர் எங்கள் compartment லில் ஏறினார். இரண்டு பெரிய லக்கேஜ் கொண்டு வந்திருந்தார். நம்ம தான் பொண்ணுங்க முன்னாடி பெரியவர்களுக்கு உதவும் ஹீரோவாச்சே. அந்த பெரியவருக்கு லக்கேஜ் வைக்க உதவி செய்தேன். அத்தோடு விட்டிருக்கலாம் அவரிடம் போய் நீங்களும் விருதுநகர்தானா என ஒரே ஒரு கேள்வி தான் கேட்டேன். அதுதான் நான் வாழ்கையில செஞ்ச மிகப்பெரிய தவறு என பின்பு தான் தெரிந்தது.
அவர் ஆமாம் நானும் விருதுநகர்தான் என ஆரம்பித்து அவர் போட்ட பிளேடு இருக்கே ஐயோ சாமீ மொக்க பிளேடு. அவர் படிக்குற காலத்துல ஆரம்பித்து அவர் செங்கல்பட்டு வந்த கதை, அவர் பாக்குற பிசினஸ் என அறுத்து எடுத்துவிட்டார். நானும் அவரிடமிருந்து எப்படியாவது தப்பித்து அந்தப் பெண்ணிடம் கடலை போடலாம் என நினைத்தேன். ஆனால் அது கடைசிவரை நடக்கவேஇல்லை. இந்த லட்சணத்தில் அந்த பெரியவர்க்கு காது வேற சரியாக கேட்காது. நான் என்ன சொன்னாலும் அவர் கேட்கவே மாட்டார். அவர்தான் பேசிக்கொண்டே இருப்பார்.
மறுநாள் காலையிலும் எனக்கு முன்பே எழுந்து விட்டார். நான் ஒரு வழியாக அவரிடமிருந்து தப்பித்து பேக்கை எடுத்து கொண்டு compartment வாசல் பக்கத்தில் வந்து நின்று கொண்டேன். அவள் இறங்கும்போது நாமும் அவளிடம் பேசிக்கொண்டே போகலாம் என நினைத்தேன். அதிலும் மண் விழுந்தது. விருதுநகரில் அவளை பிக்-அப் செய்வதற்கு அவள் அப்பா வந்திருந்தார். அப்புறம் என்ன கண்ணிலே ஒரு டாட்டா காண்பித்துவிட்டு என் விதியை நொந்தபடியே என் வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.
நம்ம யாருக்கு என்ன கெடுதல் செய்தோம் நமக்கும் மட்டும் ஏன் இந்த மாதிரி எல்லாம் நடக்குது.
ஆனால் இந்தமுறை நண்பர்கள் யாரும் வரவில்லை. மேலும் நெல்லை எக்ஸ்பிரஸ்சிலும் டிக்கெட் கிடைக்கவில்லை. ஆகையால் முத்துநகர் எக்ஸ்பிரஸ்சில் தான் புக் செய்து இருந்தேன்.
வழக்கமாக ட்ட்ரைன்னில் எப்பொழுது தனியாக சென்றாலும், எனது கம்பர்ட்மென்ட்டில் வயதான கிழவிகள் அல்லது முழுக்க முழுக்க ஆண்களே நிரம்பி இருப்பார்கள். அது என் ராசியோ என்னவோ தெரியவில்லை. ஆனால் இந்த தடவை ட்ட்ரைன்க்கு வெளியே ஒட்டி இருக்கும் சார்ட்டை பார்த்த எனக்கு ஒரு இன்ப அதிர்ச்சி. ஆம் எனக்கு அடுத்த சீட் தீபா வயது 24. ஆஹா இந்த தடவைதான் ஒரு பெண்னோடு கடலை போட்டுக் கொண்டு பயணம் செய்யும் வாய்ப்பு கிட்டியுள்ளது என மனதிற்குள் நினைத்தபடியே உள்ளே ஏறினேன்.
ட்ட்ரைன்னில் ஏறிய சிறிது நேரத்தில் அந்த பெண்ணும் வந்தாள். ம்ம் பார்ப்பதற்கு அந்தப் பெண் நன்றாகவே இருந்தாள். வண்டியும் சென்னையை விட்டு கிளம்பியது. எனக்கு எப்பொழுதுமே கொஞ்சம் starting trouble. எவ்வாறு பேச்சை ஆரம்பிப்பது என சிறிய தயக்கம். இருந்தாலும் மனதிற்குள் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அவளிடம் நீங்களும் விருதுநகர்தானா ? எனக்கேட்டேன்.( சார்ட்டில் ஏற்கனவே பார்த்தாச்சுல!). அவளும் ஆம் என்றாள். உடனே நானும் விருதுநகர்தான் எனக்கூறி, நான் வேலை பார்க்கும் கம்பெனி அவள் வேலை பார்க்கும் கம்பெனி முதலியவற்றை பரஸ்பரம் தெரிந்து கொண்டோம். மேற்கொண்டு அவளிடம் பேசும்போது விருதுநகரில் அவளது வீடு எங்க வீட்டிற்கு நாலு தெருதான் தள்ளி உள்ளது என்பதையும் தெரிந்து கொண்டேன். இவ்வாறாக எங்கள் பேச்சு நன்றாகத் தான் போய்க்கொண்டிருந்தது.
அப்பொழுது பக்கத்து compartmentலிருந்து ஒரு சிறுமி (2 வயது இருக்கும்), எங்கள் compartment வந்தாள்.வழக்கமாக இது போல் வரும் குழந்தைகளை நான் கண்டுகொள்ளவே மாட்டேன். ஆனால் இப்போது ஒரு பெண் பக்கத்தில் இருப்பதால் ஒரு ஹீரோயிசத்துக்காக அந்த சிறுமியை தூக்கிக்கொஞ்சினேன். கொஞ்சநேரத்தில் அந்த சிறுமி அழ ஆரம்பித்துவிட்டாள். சரி இறக்கி விடலாம் என நினைத்தபோது அந்த சிறுமி என்ன நினைத்ததோ வாயில் வைத்திருந்த பிஸ்கட்டை என் மீது துப்பிவிட்டது. இதைப்பார்த்து அந்த பெண் சிரித்தே விட்டாள். எனக்கெல்லாம் சரியான கோபம். இருந்தாலும் ஒரு வழியாக சமாளித்துக்கொண்டு இந்த குழந்தைகளே இப்படித்தான், இந்த மாதிரி குறும்புபன்ற பசங்களை எனக்கு ரொம்பப்பிடிக்கும் என அசடு வழிய அவளிடம் கூறினேன்.சட்டையை கழுவிவிட்டு வந்தால் செங்கல்பட்டு ஸ்டேஷன் வந்துவிட்டது.
அந்த ஸ்டேஷனிலிருந்து ஒரு பெரியவர் எங்கள் compartment லில் ஏறினார். இரண்டு பெரிய லக்கேஜ் கொண்டு வந்திருந்தார். நம்ம தான் பொண்ணுங்க முன்னாடி பெரியவர்களுக்கு உதவும் ஹீரோவாச்சே. அந்த பெரியவருக்கு லக்கேஜ் வைக்க உதவி செய்தேன். அத்தோடு விட்டிருக்கலாம் அவரிடம் போய் நீங்களும் விருதுநகர்தானா என ஒரே ஒரு கேள்வி தான் கேட்டேன். அதுதான் நான் வாழ்கையில செஞ்ச மிகப்பெரிய தவறு என பின்பு தான் தெரிந்தது.
அவர் ஆமாம் நானும் விருதுநகர்தான் என ஆரம்பித்து அவர் போட்ட பிளேடு இருக்கே ஐயோ சாமீ மொக்க பிளேடு. அவர் படிக்குற காலத்துல ஆரம்பித்து அவர் செங்கல்பட்டு வந்த கதை, அவர் பாக்குற பிசினஸ் என அறுத்து எடுத்துவிட்டார். நானும் அவரிடமிருந்து எப்படியாவது தப்பித்து அந்தப் பெண்ணிடம் கடலை போடலாம் என நினைத்தேன். ஆனால் அது கடைசிவரை நடக்கவேஇல்லை. இந்த லட்சணத்தில் அந்த பெரியவர்க்கு காது வேற சரியாக கேட்காது. நான் என்ன சொன்னாலும் அவர் கேட்கவே மாட்டார். அவர்தான் பேசிக்கொண்டே இருப்பார்.
மறுநாள் காலையிலும் எனக்கு முன்பே எழுந்து விட்டார். நான் ஒரு வழியாக அவரிடமிருந்து தப்பித்து பேக்கை எடுத்து கொண்டு compartment வாசல் பக்கத்தில் வந்து நின்று கொண்டேன். அவள் இறங்கும்போது நாமும் அவளிடம் பேசிக்கொண்டே போகலாம் என நினைத்தேன். அதிலும் மண் விழுந்தது. விருதுநகரில் அவளை பிக்-அப் செய்வதற்கு அவள் அப்பா வந்திருந்தார். அப்புறம் என்ன கண்ணிலே ஒரு டாட்டா காண்பித்துவிட்டு என் விதியை நொந்தபடியே என் வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.
நம்ம யாருக்கு என்ன கெடுதல் செய்தோம் நமக்கும் மட்டும் ஏன் இந்த மாதிரி எல்லாம் நடக்குது.
hai kesava!..,
ReplyDeletenice to see you blog..!
ama ..onga vidu.. entha theruvala da..irrku!..?
apparam.. antha ponnu..entha copmany la velai pakkuthunu..sollavea illaiyea.. neriya censor agitechea!
:-) thinesh.
கடல போடலாம்னு பாத்தா , அதை கெடுத்துபுட்டாறு தாத்தா.....
ReplyDeleteரசனையாக இருந்தது உங்கள் பதிவு..
This comment has been removed by the author.
ReplyDeleteஹாய் கேசவா ! உன் blog அருமை !.. தொடர்ந்து எண்ணங்களையும் , அனுபவங்களையும் எழுத வாழ்த்துக்கள் !
ReplyDeleteஅப்படியே உன் கூட ட்ரைன்ல வந்த அனுபவம் மாறி இருந்தது ! ஹாஹா !
ஆசை படத்துல வடிவேலு train காமெடி நியாபகம் வந்துச்சு !! சமூக சேவைனா நமக்கு ரொம்ப உயிரு !! :D
இதை வாசிக்கும் போது மணி இரவு ஒன்று, சிரிப்பை அடக்க முடியவில்லை ! ஹாஹா !
அப்புறம் விருதுநகர் பொங்கல் எப்படி இருந்தது இந்த வருடம். என்னால் வர இயலவில்லை. நம்ம நண்பர்கள் எல்லாம் பார்த்தீங்களா ? பொருட்காட்சி எப்படி
இருந்தது?
விவேக்